சிட்னி விமான நிலைய கடையில் பர்ஸ் திருடியதாக புகார் ஏர் - இந்தியா விமானி சஸ்பெண்ட்
2019-06-24@ 00:28:45

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலைய கடையில் பர்சு திருடியதாக ஏர்-இந்தியா விமானி மீது புகார் செய்யப்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏர் இந்தியா விமானம் சிட்னி விமான நிலையத்தில் இருந்து கடந்த 22ம் தேதி காலை 10,45 மணிக்கு டெல்லி புறப்பட வேண்டும். அதற்கு முன் அதன் பைலட் ரோகித் பாசின், விமான நிலைய கடையில் பர்ஸ் வாங்கியுள்ளார். விமானத்துக்கு செல் லும் அவசரத்தில் பணம் செலுத்தாமல் வந்துவிட்டார்.விமா னத்தில் உட்கார்ந்ததும் அவ ருக்கு பணம் செலுத்தாதது பற்றி ஞாபகம் வந்தது. மீண்டும் திரும்பிச் செல்ல முடியாததால் அவர் இந்தியா வந்து விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து பைலட் ரோகித் பாசின் கூறுகையில், ‘‘நான் தாத்தாவான செய்தி சிட்னி விமான நிலையத்தில் இருக்கும் போது தெரிவிக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியில் மருமகளுக்கு பரிசு வாங்க விமான நிலையத்தில் உள்ள கடைக்கு சென்றேன். பர்ஸ் ஒன்றை தேர்வு செய்தபின், விமானத்துக்கு செல்லும் அவசரத்தில் பணம் செலுத்தாமல் வந்து விட்டேன்’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஆட்டோ மீது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் 8 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;