சீனாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 61 பேர் பலி
2019-06-14@ 13:08:35

சீனா: சீனாவின் கிழக்கு பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் தொடர்புகளற்று தனித்து விடப்பட்டுள்ளனர்.
மேலும் சுமார் 37 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளப்பாதிப்பினால் மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். குவாங்டன் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த 4,300க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம்: இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து WHO ட்விட்டரில் பதிவு..!
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு..!
நார்வே நாட்டில் ‘பைசர்’ தடுப்பூசி போட்ட 23 பேர் மரணம் : இறந்தவர்கள் அனைவரும் 80 வயதை கடந்தவர்கள்
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா : உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 2.50 கோடியை நெருங்கியது!!
சீன ராணுவத்துடன் தொடர்பு: ஜியோமி உட்பட 9 நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்ப்பு: முதலீடுகளை திரும்ப பெற அமெரிக்கா கெடு
இந்தோனேஷிய தீவில் நிலநடுக்கம்: 34 பேர் பலி, 600க்கும் மேற்பட்டோர் காயம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்