அமைச்சரவையில் இருந்து ஓம் பிரகாஷ் ராஜ்பர் நீக்கம்: மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையை ஏற்று ஆளுநர் நடவடிக்கை
2019-05-20@ 12:43:00

லக்னோ: உத்திரப்பிரசே அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பார் 2017-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ளார். மேலும், உத்திரப்பிரதேச அமைச்சரவையில் எஸ்.பி.எஸ்.பி. கட்சியின் சார்பில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சராக உள்ளார். இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் ராஜ்பார் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்க உத்திரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக் மறுத்துவிட்டார். இந்நிலையில் ஓம் பிரகாஷ் ராஜ்பாரை பதவி நீக்கம் செய்ய உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஆளுநர் ராம் நாயக்குக்கு பரிந்துரை கடிதம் இன்று அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
அதிமுகவில் நடக்கும் மியூசிக்கல் சேர் போட்டியில் ராமாயணத்தின் வாலியை போல எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்: டிடிவி.தினகரன் பேட்டி
லட்சக்கணக்கான மாணவர்களின் வேலையிழப்புக்கு ஆளுநரே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!