கேரளா வளர்ச்சிக்கு பாஜ முட்டுக்கட்டை: பினராய் விஜயன் பகீர் குற்றச்சாட்டு
2019-05-08@ 01:05:30

திருவனந்தபுரம்: கேரளாவின் வளர்ச்சிக்கு பாஜ முட்டுக்கட்டை போட்டுள்ளது என்று மாநில முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைக்கான விரிவாக்க பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. இதற்கு பாஜ தான் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கேரள பாஜ தலைவர் தரன்பிள்ளை கடிதம் எழுதி உள்ளார். இது கேரள மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கேரளாவின் வளர்ச்சிக்கு பாஜ முட்டுக்கட்டை போட்டுள்ளது. கேரள மக்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கட்டும் என்ற சாடிஸ்ட் மனப்பான்மையுடன் பாஜ தலைவர் தரன்பிள்ளை செயல்பட்டுள்ளார். கேரள மக்கள் இதையெல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியொரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்புவதற்கு முன் மாநில அரசிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது பொதுமக்களிடமாவது தெரிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவர் மிகவும் ரகசியமாக கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.கேரளா கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பல்வேறு நாடுகளில் இருந்து கிடைக்க வேண்டிய நிதியுதவிக்கும் மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டது அனைவருக்கும் தெரியும். கேரளா மட்டுமல்லாமல் பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து முடக்குவதால் பாஜ நாட்டுக்கு பாரமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கேரளாவில் 39.70% கொரோனா நோயாளிகள்: இந்தியாவில் முதலிடம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு 2 வழக்குகளில் ஜாமீன்
திருச்சூர் அருகே படுஜோராக விற்பனையாகும் மூங்கில் சர்பத்: நாமும் குடிக்க செல்வோமா?
கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!