2018-19ம் நிதியாண்டில் 11,513 கோடி இலக்கை அடைய கவனம் செலுத்த வேண்டும்: துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கு அமைச்சர் உத்தரவு
2019-03-08@ 02:04:04

சென்னை: 2018-19 நிதியாண்டில் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 11,513 கோடியை முழுமையாக அடைவதற்கு முழு கவனம் செலுத்த அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவிட்டுள்ளர். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து நேற்று பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் சீராய்வுக் கூட்டம் நடந்தது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர், பதிவுத்துறைத் தலைவர், அனைத்து கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மண்டல துணைத்தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 2018-19 நிதியாண்டில் பதிவுத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கான 11 ஆயிரத்து 513 கோடியை முழுமையாக அடைவதற்கான முயற்சியில் முழு கவனம் செலுத்த அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார். ஆவணங்கள் பதிவு நாளன்று திரும்ப வழங்கியுள்ளனரா என்பது குறித்து அமைச்சர் சீராய்வு செய்தார். சீட்டு மத்தியஸ்த வழக்குகளை விரைந்து முடிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!!!
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!