2 மணிநேரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டாசு வணிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்
2018-11-26@ 15:51:14

சென்னை: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டாசு வணிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பட்டாசுகளை கொளுத்தியும், பதாகைகளை ஏந்தியும், பட்டாசு வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல் மற்றும் செந்தமிழன், மதிமுக சார்பில் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற ஆணையால் சிவகாசியில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்றும் சிறப்பு சட்டம் இயற்றி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் பட்டாசு வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு: சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு அரசின் தாய் - சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம்
தமிழக விமானநிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரிப்பு
இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!