SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 மணிநேரமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டாசு வணிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

2018-11-26@ 15:51:41

சென்னை: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டாசு வணிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பட்டாசுகளை கொளுத்தியும், பதாகைகளை ஏந்தியும், பட்டாசு வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல் மற்றும் செந்தமிழன், மதிமுக சார்பில் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற ஆணையால் சிவகாசியில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்றும் சிறப்பு சட்டம் இயற்றி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் பட்டாசு வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்