விசாகப்பட்டினம் மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா சாகுபடி: டிரோன் மூலம் கண்டுபிடிப்பு
2018-11-22@ 01:34:53

திருமலை: விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருப்பதை டிரோன் கேமரா மூலம் ஆந்திர அரசு கண்டுபிடித்துள்ளது. ஆந்திராவின் அரக்கு வனப்பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா அங்கிருந்து கடத்தப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அரக்கு வனப்பகுதியில் விளைவிக்கப்படும் கஞ்சாவை பயிர் செய்வது, கடத்தலுக்கு தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்வது, வனப்பகுதியில் இருந்து கஞ்சாவை பாதுகாப்பாக கொண்டு வந்து வாகனங்களில் ஏற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பது, அவற்றை மொத்தமாக வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது என்று பல்வேறு பணிகளில் மாபியா கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அரக்கு வனப்பகுதியில் நடைபெறும் கஞ்சா சாகுபடியை முற்றிலும் ஒழித்துக் கட்ட அரசு முடிவு செய்தது. ஆந்திர மாநில அரசு இதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில அரசு செய்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சேவைகளை வழங்கி வரும் ரியல் டைம் கவர்னன்ஸ் மூலம் அரக்கு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளை டிரோன் கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக, அரக்கு வனப்பகுதியில் டிரோன் கேமராக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு வன பகுதியில் உள்ள பாடேரு, ஹக்கும்பேட்டா, பெத்தபாயலு, மஞ்சிகிடிபட்டு ஆகிய 4 மண்டலங்களில் அடர்ந்த வன பகுதியில் மனிதர்கள் எளிதில் செல்ல இயலாத இடங்களில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிர் சாகுபடி செய்யப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்துள்ளது. மேலும், மிக உயரமான மலை பகுதிகளுக்கு இடையே இருக்கும் பள்ளத்தாக்குகளிலும் கஞ்சா பயிர் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிரோன் கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள கஞ்சா தோட்டங்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து விரைவில் அழிக்க தேவையான ஏற்பாடுகளை ஆந்திர மாநில அரசு செய்து வருகிறது.
மேலும் செய்திகள்
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
மிரட்டல் கடிதத்துடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் : முகேஷ் அம்பானியின் உயிருக்கு ஆபத்தா என விசாரிக்க மராட்டிய அரசு உத்தரவு!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!