குட்கா முறைகேடு வழக்கில் கைதுசெய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேருக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
2018-11-01@ 00:03:00

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேரையும் வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்களை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்ய, பல முக்கிய புள்ளிகள் பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மற்றும் விற்பனை செய்ய அரசு தரப்பில் ஆதரவாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவகுமார் மற்றும் கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனைவரையும் சிபிஐ அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் நீதிமன்ற காவல் முடிந்து 6 பேரும் நேற்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேரையும் வரும் நவம்பர் 14ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது
‘செல்போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள்’ லாட்ஜுக்கு வரவழைத்து மாணவி பலாத்காரம்: பிரபல டிக் டாக் நடிகர் கைது
வாக்கிங் சென்றபோது நீதிபதியை கொன்ற 2 குற்றவாளிகளுக்கு: சாகும் வரை சிறை
மாற்றுத்திறனாளி சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் வாலிபர் கைது
ஊர், ஊராக கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா: கில்லாடி குடும்பம் சிக்கியது
இடப்பிரச்னை வழக்கை ரத்து செய்ய ரூ.20,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!