இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும
2013-03-18@ 12:15:10

மீனம்பாக்கம்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதான விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை பிரச்சனையில் தமிழக மக்களுக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மன திருப்தி ஏற்படுத்தும் விதத்தில் மத்திய அரசு முடிவு எடுக்க உள்ளது. இதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் அறிவிப்பார். அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி மத்திய அமைச்சரவைதான் முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் கருத்து எதுவும் கூற முடியாது.
பா.ஜ.வை பொருத்தவரையில் இந்த விஷயத்தில் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறது. அதனால்தான் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள கருத்துக்கு உடனடியாக வரவேற்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி உடையாதா என்று கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. பா.ஜ. எதிர்க்கட்சி. எனவே அவர்கள் தங்களுடைய வேலையை செய்கின்றனர். அதே நேரத்தில் நாங்கள் ஆளும் கூட்டணி. எனவே எங்களுடைய கடமையை நாங்கள் செய்வோம். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
மேலும் செய்திகள்
இடுக்கி மாவட்டத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும்: கேரள முன்னாள் எம்எல்ஏ அறிவிப்பால் பரபரப்பு
பஸ்-வேன் மோதியதில் மூன்று பேர் பலி
புதுவையில் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் ஊழல்: நாராயணசாமி பரபரப்பு பேட்டி
பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கானோர் கடலில் நீராடி சுவாமி தரிசனம்
திருப்பூரில் பனியன் கான்ட்ராக்ட் நிறுவனத்தில் டெய்லர் வேலைக்கு தமிழர்கள் தேவை என விளம்பர பதாகை: சமூக வலைதளத்தில் வைரல்
கிராமப்புற கல்விக்கு உதவும் ஜாமீன் வழக்கு டெபாசிட் தொகை ஐகோர்ட் கிளை உத்தரவுகளால் ஸ்மார்ட் ஆகும் அரசு பள்ளிகள்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்கிறது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!