அப்சல் தூக்குக்கு எதிர்ப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
2013-02-11@ 01:04:50

ஸ்ரீநகர் : நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் நேற்று 2வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.
நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார். இவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் அங்கு பதற்றம் நிலவியது.
இதையடுத்து காஷ்மீரில் நேற்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர். பாராமுல்லா மாவட்டத்தில் நேற்று போராட்டம் நடத்திய கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஸ்ரீநகரில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட னர். இவர்களில் ஒருவர் பலியானார்.
அரசு கேட்டுக் கொண்டபடி செய்தி சேனல்களை கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் ஒளிபரப்பவில்லை. ஊரடங்கு உத்தரவால் செய்திதாள்களும் மக்களை சென்றடையவில்லை.
மேலும் செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்: கட்டாய மதம் மாற்றம் செய்தால் 3 ஆண்டு சிறை
நிலக்கரி ஊழல் விவகாரம் மம்தா மருமகன், மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசை சரத்பவார் கட்சி பலவீனப்படுத்துகிறது: மாநில காங். தலைவர் குற்றச்சாட்டு
ஜமைக்காவில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு
தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து : காமெடி நடிகை மீது வழக்கு
உ.பி வெற்றியை தொடர்ந்து இரவு விருந்து 52 அமைச்சர்களுக்கு ‘வகுப்பு’ எடுத்த மோடி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!