அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பாகிஸ்தானில் பயங்கர கலவரம்
2017-11-26@ 01:04:45

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் தெரிக் இ லாபெய்க் கட்சி நடத்திய முற்றுகை போராட்டத்தை கலைக்க முயன்றபோது பயங்கர கலவரம் வெடித்தது. இதனால் அங்கு அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பதவியேற்கும் மக்கள் பிரதிநிதிகள் சத்திய பிரமாணம் செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என்று சட்டத்துறை அமைச்சர் ஜஹித் ஹமீது சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். இதை எதிர்த்து, அவருக்கு எதிரான போராட்டத்தை மதவாத கட்சியான தெரிக் இ லாபெய்க் தொடங்கியது. இரண்டு வாரங்களாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. இஸ்லாமாபாத்தில் மட்டும் 8 ஆயிரம் அதிகாரிகள் இதில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்து கலவரமாக மாறியது.
போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதல், தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதில் ஒருவர் பலியானார். 150 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், கராச்சி உட்பட பாகிஸ்தான் முழுவதும் கலவரம் பற்றிக்கொண்டது. கலவரத்தை கட்டுப்படுத்த வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், யூ டூப் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத் தளங்களும் முடக்கப்பட்டன. மேலும் அனைத்து டிவி சேனல்கள் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்கள்: போப் பிரான்சிஸ் தகவல்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி; இலங்கையில் இருந்து அவசரமாக வெளியேறும் இளைஞர்கள்
உளவு பார்த்ததாக கூறி இங்கிலாந்து தூதரக அதிகாரி கைது; ஈரான் அரசு அதிரடி.!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என 54 பேர் பதவி விலகிய நிலையில் முடிவு
இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு; முககவசம் கட்டாயம்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்..: சிலிகுரி-காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..