கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர்
2017-03-08@ 00:39:27

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு அருகே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த 7 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியில் முஸ்லிம் அமைப்பு நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர். நேற்று முன்தினம் விடுதியை ஒட்டியுள்ள ஒரு கடையில் இருந்து காப்பகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் வெளியே சென்றார். இதை காப்பக ஊழியர் ஒருவர் பார்த்து அதிகாரிகளிடம் தெரிவித்தார். விசாரணையில், அந்த சிறுமி கடையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காப்பக அதிகாரிகள் கல்பெட்டா போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த காப்பகத்தை சேர்ந்த 15 வயதுக்கு உள்பட்ட மேலும் 6 சிறுமிகள் கடையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 6 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. இது முடிந்த பின்னரே வேறு சிறுமிகள் இதுபோல் பலாத்காரத்திற்கு ஆளானார்களா என்பது தெரியவரும். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரிடமும் விசாரணை நடத்தியதில், கடையில் பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி கடையில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அதை வீடியோவில் பதிவு செய்து வைத்துக்கொண்டு பின்னர் அதை காண்பித்து மிரட்டியே தொடர்ந்து பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை
ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விலை உயர்ந்த கேமரா திருடிய 2 பேர் கைது
முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!