SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2017-02-05@ 00:38:04

சென்னை: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹகிம் (35). இவர் தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை தனது தாயிடம் அந்த குழந்தை கூறியுள்ளது. இதையடுத்து, தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹகிமை போலீசார் கைது செய்து அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பில், ஹகிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ஹகிம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றம், ஹகிம் பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில்தான் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்