மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2017-02-05@ 00:38:04

சென்னை: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹகிம் (35). இவர் தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை தனது தாயிடம் அந்த குழந்தை கூறியுள்ளது. இதையடுத்து, தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹகிமை போலீசார் கைது செய்து அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பில், ஹகிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ஹகிம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றம், ஹகிம் பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில்தான் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரை சேர்ந்த நபர் கைது
ஓடும் பேருந்தில் கம்மல் திருட்டு
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்
தனியார் நிறுவனத்தில் பண முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி: இருவர் கைது
ஆண்டிபட்டியில் நள்ளிரவில் பரபரப்பு; 10 காய்கறி கடைகளுக்கு தீ வைப்பு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து தங்கையின் தோழியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!