தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிச
2012-10-11@ 01:47:01

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மின்கோரா நகரை சேர்ந்த 14 வயது சிறுமி மலாலா யூசுப்சய். இந்த சிறுமி, பெண் கல்விக்காகவும், குழந்தைகள் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறாள். தலிபான் தீவிரவாதிகளின் கொடுமைகள் குறித்து துணிச்சலாக எழுதினார். இவளை பாராட்டி தேசிய அமைதி விருது கொடுக்கப்பட்டது.
மின்கோராவில் உள்ள பள்ளியில் படிக்கும் மலாலா நேற்று முன் தினம் மாலை பள்ளி பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது தலிபான் தீவிரவாதிகள் அவளை கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், அவளது வயிற்றி லும், தலையிலும் குண்டுகள் துளைத்தன. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இந்நிலையில், சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடு ப்பவர்களுக்கு ஸி1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்,பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட டெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கம், சிறுமியை கொல்ல முயன்றதை ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் செய்திகள்
உளவு பார்த்ததாக கூறி இங்கிலாந்து தூதரக அதிகாரி கைது; ஈரான் அரசு அதிரடி.!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என 54 பேர் பதவி விலகிய நிலையில் முடிவு
இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு; முககவசம் கட்டாயம்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்..: சிலிகுரி-காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை
வெளிநாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், டிவிட்டர் தளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ‘காளி’ போஸ்டர் நீக்கம்...
லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு இலங்கை அமைச்சர் ராஜினாமா: பிரதமர் ரணில் பதவி விலகக்கோரி போர்க்கொடி
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!