ஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.ஐ.ஏ நடவடிக்கை
2016-11-20@ 00:02:37

புதுடெல்லி:மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை(ஐஆர்எப்) நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார். இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.வங்கதேசத்தின் தாகா நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவன், ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு தீவிரவாதப் பாதைக்கு வந்ததாக சமூக இணையதளத்தில் தெரிவித்திருந்தான். இதையடுத்து ஐஆர்எப் தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அமைச்சரவை அறிவித்தது. மகாராஷ்டிரா போலீசாரும் ஜாகிர் நாயக் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்தனர்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, வெளிநாடு சென்ற ஜாகிர் நாயக் நாடு திரும்பவில்லை. இந்நிலையில் தேசிய புலனாய்வு (என்ஐஏ) அமைப்பும் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து ஐஆர்எப்க்கு சொந்தமான 10 இடங்களில் என்.ஐ.ஏ நேற்று சோதனை நடத்தியது.
மேலும் செய்திகள்
நிலக்கரி ஊழல் விவகாரம் மம்தா மருமகன், மனைவிக்கு சுப்ரீம் கோர்ட் ‘செக்’: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசை சரத்பவார் கட்சி பலவீனப்படுத்துகிறது: மாநில காங். தலைவர் குற்றச்சாட்டு
ஜமைக்காவில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு
தாடி - மீசை குறித்து சர்ச்சை கருத்து : காமெடி நடிகை மீது வழக்கு
உ.பி வெற்றியை தொடர்ந்து இரவு விருந்து 52 அமைச்சர்களுக்கு ‘வகுப்பு’ எடுத்த மோடி
2024ம் ஆண்டில் பாஜக ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வரும்: டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேட்டி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!