தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்
2016-10-12@ 00:24:20

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 21 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி 29வது மாநிலமாக தெலங்கானா உருவானது. 10 மாவட்டங்களை கொண்டிருந்த தெலங்கானாவில் தற்போது புதிதாக 21 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி புதிய மாவட்டமான சித்திபேட்டையை முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விஜயதசமி கொண்டாடப்படும் நாளில் செயல்பட துவங்கியுள்ளது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்கள், சித்திபேட்டை, ஜன்கோன், ஜெயசங்கர், ஜக்டியால், வாராங்கல், யதாத்ரி, பெடப்பள்ளி, காமாரெட்டி, மேடக், மஞ்செரியல், விகராபாத், ராஜன்னா, ஆசிபாபாத், சூர்யாபேட்டை, கோதகுடேம், நிர்மல், வனபார்த்தி, நாகர்கர்னுூல், மகபூபாபாத், ஜோகுலம்பா மற்றும் மெட்சா ஆகும்.
மேலும் செய்திகள்
திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
வணிகம் புரிதலை எளிதாக்குதல் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு சிறந்த சாதனையாளர் பிரிவிற்கு முன்னேற்றம்.: ஒன்றிய அரசு
5 நிர்பயா குற்றவாளிகள் உள்பட 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி
வீட்டில் குண்டு வெடித்து தந்தை, மகன் சாவு
கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..