ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? கோவையில் பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை
2016-10-05@ 01:19:28

கோவை: கோவையில் பிடிபட்ட 5 பேரில், 2 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கனகமலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மன்சித் (30), அபுபஷீர் (29), சுவாலிஷ் முகமது (26), சபான் (30), ஜாசிம் (25), ராம்ஷெத் நகீலன் கண்டியல் (24) ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) போலீஸ் அதிகாரிகள் கடந்த 1ம் தேதி கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் ேகாவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட ஐந்து பேரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து, என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். நேற்று 3வது நாளாக 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். 5 பேரில் இரண்டு பேர், கோழிக்கோட்டில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பேஸ்புக் பக்கத்தின் சாட் (தகவல் பரிமாறும் தனிப்பட்ட பிரிவு) மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும், பரிமாறிக்கொண்ட தகவல்களை உடனுக்குடன் அழித்துள்ளனர்.
இதுகுறித்து என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். பேஸ்புக் பக்கத்தின் சாட் மூலம் என்னென்ன தகவல் பரிமாறப்பட்டது என்பது பற்றி பல கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கேரளாவில் கைது செய்யப்பட்ட 6 பேரில், அபுபஷீர் என்பவர் ேகாவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தவர் என என்.ஐ.ஏ போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த இரு நாட்களாக விசாரணை முடிந்ததும், மாலையில் ஐந்து பேரையும் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், நேற்று தொடங்கிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த 2 கரடிகள் மீட்பு
புதுச்சேரி சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களில் தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் பணி நிரந்தரம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
குமரி ஆபாச பாதிரியாரை காவலில் எடுத்து தீவிர விசாரணை
தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி
பழனி மலையடிவாரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடி கைது
மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கால அட்டவணை வெளியீடு!
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!