7 பெண்களை மணமுடித்த ‘கல்யாண மன்னன்’ கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை
2016-07-25@ 02:00:17

மதுரை: ஏழு பெண்களை மணமுடித்த ‘கல்யாண மன்னன்’ நேற்று கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை கே.புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் சாலமியா பானு (28). இவர் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் கொடுத்த மனுவில், ‘மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமாவின் அறிமுகத்தின் பேரில், காதர் பாட்சா என்பவருக்கும், எனக்கும் கடந்த ஜூன் 26ல் திருமணம் நடந்தது. மதுரை அண்ணா நகரில் வசித்தபோது, பீரோவில் இருந்த ரூ.3 லட்சம், 8 பவுன் நகைகள், ஏடிஎம் கார்டுகள், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.35 ஆயிரத்துடன் காதர்பாட்சா தலைமறைவாகி விட்டார். இவர் என்னை திருமணம் செய்வதற்கு முன்பு சென்னையை சேர்ந்த நிர்மலா, திண்டுக்கல்லை சேர்ந்த ஜமுனா, வத்தலக்குண்டை சேர்ந்த மகாலட்சுமி உள்பட 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். எனவே, காதர்பாட்சா, தஸ்லிமா, அப்துல்கயூம் மற்றும் அவரது நண்பர் ஜாகீர்உசேன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் நேற்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர், காதர்பாட்சா, தன்னிடம் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.50 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக மதுரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
புதுச்சேரி குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் கைது: சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இளம்பெண்ணும் சிக்கினார்
புதுகை அருகே கணவருடன் தகராறில் பயங்கரம் கழுத்து நெரித்து 2 குழந்தைகள் கொலை; கொடூர தாய் கைது
திண்டுக்கல் அருகே மான் தோல், நரி பல் வைத்திருந்த ஜோதிடர் கைது
புதுகையில் கஞ்சா விற்ற எஸ்ஐ மகன் உள்பட 5 பேர் கைது
பெரம்பலூர் அருகே சினிமா டைரக்டருக்கு கத்தி வெட்டு: 6 மர்ம நபர்களுக்கு வலை
சேத்துப்பட்டு அருகே சொத்து தகராறில் தம்பி சுட்டுக்கொலை மாஜி ராணுவ வீரர், மனைவியுடன் கைது: பல மணிநேர சமரசத்திற்கு பின் சடலம் போலீசாரிடம் ஒப்படைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!