திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை சம்பா திருமணத்துக்கு பின்பு கவுனி அரிசி உணவு: நெல் திருவிழாவில் சுவாரசிய தகவல்
2016-06-06@ 16:47:47

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் கிரியேட், நமது நெல்லை காப்போம் அமைப்புகள் சார்பில் 2 நாள் நடந்த தேசிய அளவிலான நெல் திருவிழா நேற்று நிறைவடைந்தது. மண் வளமும், மேம்பாடும் என்ற தலைப்பில் கோவில்பட்டி வேளாண் அலுவலர் பூச்சி செல்வம் பேசுகையில், ‘இந்தியாவில் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இவற்றையெல்லாம் ரசாயன உரங்களின் வரவால் நாம் இழந்து விட்டோம். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதால் மண்ணில் ரசாயனத்தை பயன்படுத்த துவங்கினோம். அதனால், பாரம்பரிய மருத்துவ குணம் வாய்ந்த நெல்லை இழந்து விட்டோம். ஒரு பிடி மண்ணில் வண்டல், களி, மணல் இருக்க வேண்டும். இவை மூன்றும் சரி விகிதத்தில் இருந்தால் நல்ல மண். இதில் ஏதாவது குறைந்தால் அதற்கு ஏற்றவாறு நாம் பக்குவப்படுத்திட வேண்டும்’ என்றார்.
காரைக்கால் இயற்கை வேளாண் கல்வி நிறுவனத்தை சார்ந்த டாக்டர் உமாமகேஸ்வரி பேசுகையில், ‘இன்றைக்கு உணவால் தான் நோய்கள் அதிகம் வருகிறது. நோயின் தாக்கத்தால் உலகமே அழிவின் விழிம்புக்கு சென்று கொண்டிருக்கிறது. உலகத்தை நல் வழியில் கொண்டு செல்ல எல்லோருக்கும் பொறுப்புண்டு. நோய் இல்லாமல் வாழ வேண்டுமானால் உணவு பழக்க வழக்கம் அவசியம்’ என்றார்.சென்னை எத்திராஜ் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் சத்துணவியல் துறை பேராசிரியை மேனகா பேசுகையில், ‘பாரம்பரிய நெல்லில் மாப்பிள்ளை சம்பா என்பது திருமணத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டியது.
கவுனி அரிசியை திருமணத்திற்கு பிறகும், பூங்காரு என்ற அரிசியை மகப்பேறு காலத்திலும், பால்குடவாரை என்ற அரிசியை குழந்தை பிறந்த பின் பெண்கள் உட்கொள்ள வேண்டும். வாரன்சம்பா என்ற அரிசியை குழந்தை பிறந்த ஆறு மாதம் கழித்து ஊட்ட வேண்டும். காட்டுயானம் கஞ்சி குடித்தால் மூட்டு வழி போகும். இப்படி பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை’ என்றார்.
மேலும் செய்திகள்
வான் வழியே பாய்ந்து வரும் தங்க மழை: 5 ஆண்டுகளில் 11 டன் கடத்தல்; இறக்குமதி வரி, விலை உயர்வால் அதிகரிப்பு; தடுக்க மாற்று வழியை தேடுமா ஒன்றிய அரசு
காலத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் பரதக்கலை: வடசென்னையில் அதிகரிக்கும் பரத நாட்டிய பள்ளிகள்
நவம்பர் 19 (இன்று) உலக கழிவறை தினம்
இலங்கைக்கு செல்ல ராமருக்கு வழிகாட்டிய பிள்ளையார்: ஆன்மிக பக்தர்களின் மனதை கவரும் சேதுரஸ்தா சாலை
புண்ணியத்தை தேடி தரும் கும்பகோணம் மகாமககுளம்
பர்ப்பிள் பேக்கரி மற்றும் ஸ்நாக்ஸ்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!