குமரி மீன்பிடி துறைமுகம் படகு கட்டும் தளத்தில் பயங்கர தீ விபத்து: 7 படகுகள் எரிந்து நாசம்
2016-04-15@ 20:13:27

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 படகுகள் எரிந்து நாசமாயின.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் விசைப்படகுகள் கட்டும் தளம் உள்ளது. இங்கு தற்போது 50க்கும் மேற்பட்ட புதிய விசைப்படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இன்று காலை 6 தொழிலாளர்கள் படகு கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென படகு கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மரங்களில் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அவர்கள் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியகுமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுப்படாமல் தொடர்ந்து எரிந்ததால் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.படகு கட்டும் தளத்தில் உள்ள மரங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் 3 வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். படகு கட்டும் பகுதியில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ரூ.80 லட்சம் மதிப்பிலான 7 படகுகள் தீயில் எரிந்ததாக தெரிகிறது
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!