ஜெ., கூட்டத்திற்காக தீவுத்திடல் பொருட்காட்சி அரங்குகள் அகற்றம் : கோடிக்கணக்கில் இழப்பு என புகார்
2016-04-08@ 10:15:54

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக சென்னை தீவுத்திடலில் சுற்றலாப் பொருட்காட்சி அரங்குகள் அகற்றப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தீவுத்திடலில் நாளை தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். இதற்காக தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுலா பொருட்காட்சி அரங்குகளை பொக்லைன் எந்திரங்களை கொண்டு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். ஒப்பந்த விதியின் படி 40 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றாமலே முன்னறிவிப்பின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரங்குகள் திடீரென அகற்றப்பட்டதால் அவற்றை அமைத்தவர்களுக்கும், பொருட்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்த தனியார் நிறுவனத்திற்கும் கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் துணையோடு நடைபெற்ற இந்த அகற்றத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரங்க அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மலபார் கோல்டு டைமண்ட்ஸில் இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் விற்பனை
திருப்பதியில் கங்கனா தரிசனம்
தசாவதாரம் 2ம் பாகம் உருவாக்கவே முடியாது: சொல்கிறார் கே.எஸ்.ரவிகுமார்
பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!