ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் தொடர்பு : வேலூரில் பிடிபட்ட தீவிரவாதியிடம் விசாரணை
2015-10-17@ 00:36:11

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீவிரவாதியிடம் 26 மணிநேரமாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை அவனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேலூரில் பிரபலமான சிஎம்சி மருத்துவமனைக்கு கடந்த 14ம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர் மருத்துவமனையில் 4 இடங்களில் குண்டு வைத்திருப்பதாக கூறினான். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து காலை முதல் மாலை வரை மருத்துவமனையில் நடத்திய சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று தெரியவந்தது.
மிரட்டல் வந்த போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் ஆம்பூர் உமர் ரோட்டில் மதரசா என்ற இடத்தில் பதுங்கி இருந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சையத் அகமது அலி(40) என்பவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப்பின் முரணமாக பதில் அளித்தார். இதனால், எஸ்.பி. செந்தில்குமாரி, காவல்துறை இயக்குனரக ஏஐஜி ஆஸ்ராகர்க், சிபிசிஐடி டிஎஸ்பி ஆனந்தகுமார், நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆகியோர் விசாரணை நடத்தினர். விடிய விடிய சுமார் 26 மணிநேரமாக நடந்த இந்த விசாரணை நேற்று மாலை 4 மணிக்கு முடிந்தது.
இந்த விசாரணையில் பிடிப்பட்ட சையத் அகமது அலி உபி மாநிலம் ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளவன் என்றும், அவனிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரும், உத்தரபிரதேச மாநில போலீசாரும் வருவார்கள் என்றும் தகவல் கிடைத்தது. இதனால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தொடர் விசாரணையில் திரிபுரா மாநிலம் தலியார்கந்தி கிராமத்தை சேர்ந்த சையத் மாமுன்அலி என்பவரின் மகன் என்றும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அதற்காக சென்னை அப்பல்லோ, அசாம் மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது.
சிகிச்சைக்காக மீண்டும் சிஎம்சி மருத்துவமனைக்கு வரும்போது தன்னை செக்யூரிட்டிகள் வெளியில் தள்ளியதும், இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தம் தெரியவந்தது. சையது அகமதுஅலியை வேலூர் ஜேஎம் 1 கோர்ட்டில் போலீசார் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மீனாசந்திரா வருகிற 30ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவைல விதித்து உத்தரவிட்டார். இதனால், வேலூர் சிறையில் அவரை அடைத்தனர். முன்னதாக, முகமது அலியிடம் இருந்து 11 சிம்கார்டுகள், 4 செல்போன்களை பறிமுதல் செய்து உள்ளனர். இதில், ஒன்றை பயன்படுத்திதான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் செய்திகள்
அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடி உயர்மட்ட பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் கோரி: சேலத்து இளைஞருக்கு குவியும் பாராட்டு
கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதி சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்
அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல பாதையில் விரைவில் ரயில் இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
கடந்த ஆட்சியில் தரமற்ற சீரமைப்பு பணிகள் பொலிவிழந்த விழுப்புரம் நகராட்சி பூங்கா: மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சிறுவர்கள் கோரிக்கை
உறை பனி கொட்டிய போதிலும் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!