ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் குறித்து சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
2015-08-06@ 14:46:49

வேலூர் : ஷமீல் அகமது மரணம் ெதாடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை ேசர்ந்த பவித்ரா காணாமல் போனது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல்அகமத்திடம் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஷமீல்அகமது, சிகிச்சை பலனின்றி ஜூன் 26ம் தேதி இறந்தார். இதனால் ஆம்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து டிஜிபி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணை தொடங்கிய நிலையில் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளா வேட்டையாடியதாக மார்ட்டின் பிரேம்ராஜ் உள்பட 2 பேரை வனத்துறையினர் கைது செய்து பாளையகோட்டை சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேலூர் சிபிசிஐடி போலீசார் மார்ட்டின் பிரேம்ராஜை கைது செய்தனர். இதைதொடர்ந்து நேற்று காலை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் ேஜ.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 5 நாள் காவல் அனுமதிக்கும்படி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 நாள் அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்ெதந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழக வனத்துறையின் முதல் மோப்பநாய் சிமி உயிரிழந்தது: வனத்துறை மரியாதையுடன் உடல் அடக்கம்
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிக்கு களக்காடு புலிகள் காப்பகத்தில் 30 இடங்களில் 60 அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தம்
கொடைக்கானலின் பசுமைக்கு ஆபத்து; காட்டுத்தீயின் கோரத்தால் கட்டாந்தரையானது வனம்: உணவின்றி திண்டாடும் வனவிலங்குகள்
கீழடி அருகே திருப்புவனம் பகுதியில் பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு
பதனீர் சீசன் துவக்கம் மாவட்டத்தில் கருப்பட்டி தயாரிப்பு பணி மும்முரம்: பனை மேம்பாடுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு
பார்த்திபனூர் அருகே பாண்டியர்கால பெருமாள் சிலைகள் கண்டுபிடிப்பு
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!