காஷ்மீரில் ஐ.எஸ். அமைப்பின் கொடி எரிக்கப்பட்டதால் பதற்றம் : தொடரும் கல்வீச்சால் ஊரடங்கு உத்தரவு
2015-07-22@ 10:07:03

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. தங்களுக்கு எதிரான வெளிநாட்டவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து கொன்று குவிப்பதோடு பெண்கள், குழந்தைகளை கூட மிக கொடூரமாக அவர்கள் கொலை செய்வது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காஷமீர் மாநிலம் ரஜொரி நகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியை விஸ்வ ஹிந்து பரீசத் அமைப்பினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து போலீசார் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
ஐ.எஸ். அமைப்பின் கொடியை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பதற்றம் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் மற்றும் ராணுவத்தினர் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!
ராகுல் காந்தி தகுதிநீக்கம்; மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மேலும் 9 பேர் உயிரிழப்பு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்!!
எந்த தடையும் மக்களை கட்டுப்படுத்தாது பாகிஸ்தானை சீரமைக்க பெரிய அறுவை சிகிச்சை தேவை: இம்ரான் கான் ஆவேசம்
பான் மசாலா,சிகரெட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி