தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
2015-03-17@ 17:14:36

தவாங்கீர்: தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தவிர்த்த 9 வயதான புத்திசாலி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தவாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த அவங்கிர் கிராமத்தில் வசித்து வரும் மஞ்சுநாத் என்பவரின் மகன் சித்தேஷ் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6.30 மணிக்கு ரயில்வே தண்டவாளத்தை அந்த சிறுவன் கடக்க முயன்ற போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான்.
பின்னர் தனது தந்தையிடம் அதனை தெரிவித்த போது, அவர் விளையாட்டாக கூறுகிறான் என்று அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். இதுகுறித்து, சிறுவன் சித்தேஷ் கூறியதாவது, தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டதும் நான் பயந்து விட்டேன். எனது தந்தையிடம் இதுகுறித்து கூறுயதும், நான் விளையாட்டாக சொல்வதாக எனது தந்தை நினைத்ததால், நான் அவரை சம்பவ இடத்திற்கு இழுத்து சென்றேன் என்றான். அந்த நேரத்தில் சில ரயில்கள் வரும் வேளை நெருங்கியது. அப்போது அந்த வழியாக வரும் ரயில்களை நிறுத்த என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம் என்று மஞ்சுநாத் கூறினார்.
இதனையடுத்து, ரயில் வரும் நேரம் நெருங்கியதையடுத்து, திடீரென தனது மகன் சித்தேஷ் தனது சிகப்பு பனியனை எடுத்து ஒரு குச்சியில் சுத்திக்கொண்டு, தண்டவாளத்தில் சுமார் 7.30 மணியளவில் ரயில் வரும் பக்கம் ஓடினான். அப்போது, ஹீப்ளி-சித்ரதுர்கா பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. சிறுவன் சிகப்பு துணியை காட்டிக் கொண்டி ஓடி வருவதை கண்ட ரயிலின் ஓட்டுநர் ரயிலை நிறுத்திதாக சிறுவனின் தாயார் தெரிவித்தார். ரயிலில் உள்ள பயணிகள் அந்த சிறுவனை பாராட்டினர்.
இதனையடுத்து அந்த சிறுவனுக்கு தைரிய விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்வே இன்ஜினியர் ஒருவர் அவனது தைரியத்தை பாராட்டி ரூ.500 வழங்கினார். என்று தவாங்கீர் ரயில்வே கோட்ட அதிகாரி திப்பையா தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!