ஆம் ஆத்மி பிரச்சாரத்திற்கு ஹவாலா பணம் : தொலைக்காட்சி செய்தியால் டெல்லியில் பரபரப்பு
2015-02-03@ 09:25:38

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி போலியான நிறுவனங்களின் பெயரில் நன்கொடை பெற்றுள்ளதாக வெளியான தகவலால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவிதமான வியாபாரத்திலும் ஈடுபடாமல் 3 நிறுவனங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக ஆங்கில செய்தி தொ¬க்காட்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது ஹவாலா பணம் என்றும், இது குறித்து கம்பெனிகள் பதிவாளர் அலுவகத்தில் புகார் தெரிவிக்க போவதாகவும் அந்த தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. நன்கொடை பெற்றதில் தவறில்லை என்றும், குறிப்பிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு கட்சி பொறுப்பாகாது என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி 35 இடங்களில் வெற்றி பெறும் என்று வெளியான கருத்து கணிப்பை தொடர்ந்து பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரபடுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ள 1 கோடியே 20 லட்சம் வாக்களர்களுக்கும் ஆதரவு கோரி தனித்தனியாக கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி
சொல்லிட்டாங்க...
தவறு செய்தவர்களை தண்டிக்காமல் போதைப்பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? பாமக தலைவர் அன்புமணி கேள்வி
கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி முழுமையாக குணமடைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து 30ம் தேதி மாநிலம் தழுவிய மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!