ஆம் ஆத்மி பிரச்சாரத்திற்கு ஹவாலா பணம் : தொலைக்காட்சி செய்தியால் டெல்லியில் பரபரப்பு
2015-02-03@ 09:25:38

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி போலியான நிறுவனங்களின் பெயரில் நன்கொடை பெற்றுள்ளதாக வெளியான தகவலால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவிதமான வியாபாரத்திலும் ஈடுபடாமல் 3 நிறுவனங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக ஆங்கில செய்தி தொ¬க்காட்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது ஹவாலா பணம் என்றும், இது குறித்து கம்பெனிகள் பதிவாளர் அலுவகத்தில் புகார் தெரிவிக்க போவதாகவும் அந்த தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. நன்கொடை பெற்றதில் தவறில்லை என்றும், குறிப்பிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு கட்சி பொறுப்பாகாது என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி 35 இடங்களில் வெற்றி பெறும் என்று வெளியான கருத்து கணிப்பை தொடர்ந்து பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரபடுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ள 1 கோடியே 20 லட்சம் வாக்களர்களுக்கும் ஆதரவு கோரி தனித்தனியாக கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்..! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தெலங்கானாவில் ஜூலை 8ல் புதிய கட்சி தொடங்குகிறார் சர்மிளா: 2023ல் ஆட்சியை பிடிக்க வியூகம்
அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏ உட்பட 6 பேர் நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அதிரடி நடவடிக்கை
சொல்லிட்டாங்க...
போர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பாமகவுடன் கூட்டணி சேர்ந்து சாதி வெறியை தூண்டுகிறார்: எடப்பாடி மீது ரவிக்குமார் எம்பி குற்றச்சாட்டு
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!