ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து மண்டலங்களில் தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்
2015-02-03@ 02:04:44

சென்னை : போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான 12வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2013, செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதற்கான பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்பட 11 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 12ம் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் நிதிதுறை செயலாளர் உமாநாத் தலைமையில் 14 கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த குழு நியமித்து 1 மாத காலமாகியும் இன்னும் பேச்சுவார்த்தை நடப்பதற்கான தேதி அறிவிக்கப்படாததால், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை பல்லவன் சாலையில் உள்ள தோமுச அலுவலகத்தில் 11 போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், தொமுச மாநகர பொருளாளர் பன்னீர்செல்வம், சிஐடியு மாநகர பொது செயலாளர் பாலகிருஷ்ணன், ஏஐடியுசி கஜேந்திரன், ஐஎன்டியூசி சுப்புராயன், டிஎம்எஸ் மீனாட்சி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சிஐடியு மாநகர பொது செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: பேச்சுவார்த்தை குழு அறிவித்து 1 மாதத்திற்கு மேல் ஆகியும் எந்த தகவலும் இல்லை. இடைக்கால நிவாரணமும் முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே, இதனை கண்டித்து நாளை சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். வரும் 7ம் தேதி சென்னை பல்லவன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொ.மு.ச அழைப்பு: முன்னதாக தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி முடிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஊதிய பேச்சு வார்த்தையை நடத்த குழு அமைத்து விரைவில் பேச்சுவார்த்தையை துவக்க அமைச்சர் ஒப்புக் கொண்டார். அதனடிப் படையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.
வேலைநிறுத்தம் முடிந்து 1 மாதகாலமாகியும் இதுவரை பேச்சு வார்த்தை துவங்கப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கான தேதியும் அறிவிக்கப்படவில்லை. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க கோரியும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களின் தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்தும் 4ம் தேதி(நாளை) அனைத்து மண்டலங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் வருகிற 7ம் தேதி மாலை 4 மணியளவில் பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் வியாபாரிகள் பயணம்
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி
புக்கத்துரை கிராமத்தில் தரிசு நிலங்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு: விவசாயிகளுடன் கலந்துரையாடல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!