பவானிசிங்குடன் கருத்து வேறுபாடு ஜெயலலிதா வழக்கில் இருந்து முருகேஷ் மரடி திடீர் விலகல்
2015-02-03@ 01:04:38

பெங்களூரு: ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு உதவி வக்கீலாக செயல்பட்டு வந்த முருகேஷ் மரடி வழக்கில் ஆஜராவதில் இருந்து விலகினார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு தனிநீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுன்ஹா முன் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, அரசு வக்கீலாக இருந்த பி.வி.ஆச்சார்யா ராஜினாமா செய்தபோது, புதிய அரசு வக்கீலாக பவானிசிங் கடந்த 2013 பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உதவியாக முருகேஷ்மரடி நியமனம் செய்யப்பட்டார். இவ்வழக்கு தனி நீதிமன்றத்தில் நடந்தபோது, பவானிசிங்கை காட்டிலும், முருகேஷ்மரடி தான் அதிகமாக ஆஜராகி வாதம் செய்தார். குற்றவாளிகள் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்தியது, குற்றவாளிகள் தரப்பு வக்கீல்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பது உள்பட தனது திறமையை முழுமையாக காட்டினார்.
தனிநீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்வதில் பவானிசிங்கின் பங்களிப்பை காட்டிலும், முருகேஷ் மரடியின் பங்களிப்பு அதிகம் இருந்தது என்பது உண்மை. தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் பவானிசிங்கிற்கு உதவியாக முருகேஷ்மரடி கடந்த இரண்டு மாதமாக செயல்பட்டுவந்தார். இந்நிலையில் அவர் திடீரென வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொண்டுள்ளார். இது தொடர்பாக விசாரித்தபோது, அரசு துணை வக்கீலாக செயல்பட முறைப்படி அரசிடம் அனுமதி கடிதம் பெற்று கொடுக்க வேண்டும்.
மேலும் உரிய சம்பளம் தர வேண்டும் என்று பவானிசிங்கிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் அனுமதி கடிதமும், சம்பளம் வாங்கி கொடுக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. அதையேற்காத மரடி, கர்நாடக அரசின் அனுமதி பெற்று கொடுத்தால் ஆஜராவேன் என்று கூறியதாக தெரிகிறது. அது சாத்தியமில்லை என்று பவானிசிங் கூறியதால், வழக்கில் இருந்து மரடி விலகியதாக தெரிகிறது.
மேலும் செய்திகள்
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வத் திடீர் கைது: போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்ததாக குற்றச்சாட்டு
நடுரோட்டில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை ஏரியில் வீசிய கணவன் கைது: திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்
சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க முயற்சி; அமித்ஷாவுடன் இன்று ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவு.!
பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11,739 ஆக குறைந்தது... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது!!
ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் குடும்பங்களுக்கு குறி?
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!