கூலி உயர்வுகோரி விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி போராட்டம்
2015-02-03@ 00:53:30

ஆண்டிபட்டி : புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தியதால் ஆண்டிபட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சுப்புலாபுரத்தில் உள்ள 40 விசைத்தறிக்கூடங்களில் 800 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு காட்டன் மற்றும் ஏற்றுமதி ரக ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விசைத்தறி மற்றும் நூல் சுற்றுதல், பண்ணை ஏற்றுதல், வைண்டிங், சாயம் ஏற்றுதல், பாவு சுற்றுதல் உள்ளிட்ட தொழில்களில் 1,500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். கடந்த 2012ல் போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் 2014, டிச. 31ம் தேதி முடிந்துவிட்டது. எனவே, புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துமாறு அனைத்து தொழிற்சங்கங்களும் விசைத்தறி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
புதிய கூலி ஒப்பந்தம் அமல்படுத்தாததை தொடர்ந்து, ஜன. 1ம் தேதி முதல் 50% கூலி உயர்வு, 20 சதவீத போனஸ், விசைத்தறி கூடங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து புதிய ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி, சுப்புலாபுரத்தில் நேற்று காலை தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்றனர். தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடக்கும் சமரச பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாய்மர படகு போட்டி
சாலையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
தேங்காப்பட்டணத்தில் திடீர் கடல் சீற்றம் அரயந்தோப்பு சாலை மணல் மேடானது
தெற்கு ரயில்வேயில் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் கொல்லம்- கன்னியாகுமரி மெமூ தினசரி இயக்க அனுமதி கொச்சுவேளி ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு
அச்சுறுத்தும் அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்ட வேண்டுகோள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!