மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் இலங்கையில் அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
2015-02-03@ 00:26:21

சென்னை : சென்னை திநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரதராஜன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தமிழகத்திலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் 65 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. தாயகம் திரும்புவதற்கும் அங்கு சென்று புது வாழ்வு தொடங்குவதற்கு அத்யாவசிய தேவைகளுக்கு தேவையான நிதி உதவியை மத்திய-மாநில அரசுகள் அவர்களுக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!
சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
சொல்லிட்டாங்க...
முதல்வரின் முதன்மை திட்டம்
ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது: சண்முகம் புரியாமல் பேசுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!