ஜப்பான் வாலிபர் மாயம் தூதரக அதிகாரி நேரில் விசாரணை
2015-02-03@ 00:22:14

சென்னை : மாயமான ஜப்பான் நாட்டு வாலிபர் விஷயத்தில், அந்நாட்டு தூதரக அதிகாரி வாலிபர் தங்கி இருந்த விடுதி நிர்வாகிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் யுடோ குகுச்சி (25). இவர், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னைக்கு சுற்றுலா வந்தார். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி வெளியே சென்றவர், மீண்டும் தங்கும் விடுதிக்கு திரும்பவில்லை. அவரது உடமைகள் அனைத்தும் அவரது அறையிலேயே இருந்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி சேகர், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜப்பான் வாலிபர் கடத்தப்பட்டாரா அல்லது வழி தெரியாமல் தவித்து வருகிறாரா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு ஜப்பான் தூதரக அதிகாரி ரயேஜ் ப்யூஜி நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து யுடோ குகுச்சி பெற்றோருக்கும் தகவல் தெரிவிப்பதற்கான நடைமுறையும் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மாயமான ஜப்பான் வாலிபரின் புகைப்படம் சென்னை மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் வியாபாரிகள் பயணம்
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி
புக்கத்துரை கிராமத்தில் தரிசு நிலங்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு: விவசாயிகளுடன் கலந்துரையாடல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!