அண்ணா நினைவுநாளையொட்டி 309 கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு : தமிழக அரசு அறிவிப்பு
2015-02-03@ 00:21:41

சென்னை : அண்ணா நினைவுநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் 309 கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்து சமய அறநிலைய துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுதோறும் முக்கிய கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்குபெறும் வகையில் அண்ணா நினைவு நாளன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தில் 309 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து இன்று நடைபெற உள்ளது.
சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அண்ணா நினைவுநாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபாலும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். சென்னையிலும் மாநிலத்தின் பிற இடங்களிலும் கோயில்களில் நடைபெறும் அண்ணா நினைவு நாளை ஒட்டிய சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
மேலும் செய்திகள்
மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!
2 முறை தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது தீவிர தொற்று, உயிரிழப்பு ஏற்படாது
ஜனாதிபதி, பிரதமர் புகைப்படம் வைப்பது குறித்து அரசு அலுவலகங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
உரிய அனுமதி பெறாத டேங்கர் லாரிகள் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
ரயில் சேவையில் இன்று மாற்றம்
விசாரணைக்கு காவல் நிலையம் வந்தபோது பிளேடால் கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: திருவிக நகரில் பரபரப்பு
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!