ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மீண்டும் 0.25% குறைய வாய்ப்பு
2015-02-02@ 12:27:07

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி (RBI), நாளை வெளியிடயிருக்கும் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% என்ற அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 மாதங்களாக நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிட்ட பிறகு 25 அடிப்படை புள்ளிகள் (bps) என்ற விகிதத்தில் ஆச்சரியமூட்டும் வகையில் வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் தெரிவித்துள்ளது. அதாவது பிப்ரவரி 3ம் தேதி, செவ்வாய்கிழமை, 2014-15ம் நிதியாண்டில் அதன் ஆறாவது இரு மாத நிதிக் கொள்கையின் மறுஆய்வு கூட்டத்தில், மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோல் இந்தியா நிறுவனத்தின் 10% பங்கு விற்பனையின் மூலம், மத்திய அரசுக்கு ரூ.22,500 கோடி லாபம் கிடைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஜனவரி 15ம் தேதி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைத்து 8%ல் இருந்து 7.75% ஆக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சில்லரை பணவீக்கம் 5% ஆகவும், மொத்த விலை பணவீக்கம் 0.1% ஆகவும், குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது இன்னும் கூடுதலான அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை சமாளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு ரூ.24,000 கோடி கிடைத்துள்ளது, அதில் செயில் நிறுவன பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கடந்த வருடம் ரூ.1,719 கோடி மத்திய அரசுக்கு நிதி கிடைத்துள்ளது. மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை கூடுதலாக அதிகரிக்கப்படுவதால் இந்த வருடத்தின் பங்கு விற்பனை ரூ.43,425 கோடி என்ற இலக்கை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரியண்டல் வங்கியின் வர்த்தக தலைமையாளரான அனிமீஸ் சவுகான், ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன் பிப்ரவரி 3ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்ந்து சரியும் தங்க விலை... நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!! சவரன் ரூ.88 குறைவு!!
பங்குச்சந்தை அபாரம் சென்செக்ஸ் 60,000ஐ தாண்டியது
சரிவுடன் தொடங்கிய தங்க விலை... சென்னையில் சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்தது
மக்களே தங்கம் வாங்க சரியான நேரம்...சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.39,120-க்கு விற்பனை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...