ஐக்கிய அரபு எமிரேட்சில் முதல்முறையாக ரூபே வகை ஏடிஎம் கார்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
2019-08-22@ 14:18:56

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை (23.8.190 அன்று வருகை தர உள்ளார். இதுகுறித்து அமீரக இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி கூறியதாவது. ஐக்கிய அரபு அரபு எமிரேட்ஸ்க்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை தர உள்ளார் இந்த சுற்றுப்பயணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அமீரகத்தின் உயரிய விருது இந்திய பிரதமருக்கு நேரில் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் ரூபே என்றழைக்கப்படும் கார்டு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த வகைக் கார்டுகள் விசா, மாஸ்டர் காடுகள் போன்று பயன்படுத்தலாம். கடைகள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொருட்களை வாங்க இந்த கார்டுகளை பயன்படுத்தலாம். இதற்கான சேவை கட்டணம் இல்லை. இந்தியா, சிங்கப்பூர், பூட்டான், மாலத்தீவு ஆகிய நாடுகளில் இந்த கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் ரூபே கார்ட் பயன்படுத்தி சேவை கட்டணம் இல்லாமல் பொருட்களை வாங்க முடியும். மேலும் கரன்சி மாற்றும் செலவையும் சேமிக்க முடியும். ஆனாலும் இவ்வகை கார்டுகளை அமீரகத்தில் உள்ள ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று அறிமுகப்படுத்தும் போது தான் தெரியவரும். மேலும் மகாத்மா காந்தியின் நூற்றி ஐம்பதாவது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் அவரது உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
துபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்
தீபாவளியையோட்டி துபாயில் 16 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள்
காந்தி பிறந்தநாளையொட்டி துபாயில் சிறப்பு நிகழ்ச்சிகள்... அமைதி மற்றும் சகிப்புதன்மைக்கான நடைபயணம்
இந்திய சுதந்திர தினத்தையோட்டி துபாயில் ரத்ததான முகாம்
கேரளாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது
துபாய் அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!