ஜெர்மனியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா
2019-08-07@ 17:06:12

ஹம் : ஜெர்மனியின் ஹம் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆறுமுக பாஸ்கர ஸ்வாமிகளின் அபிஷேகம் மற்றும் பூஜைகளுடன் விழா துவங்கியது. தேர் பவனியின் போது பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக்காவடி, கற்பூரச்சட்டி, பால்குடங்கள் ஏந்தி வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மழை பெய்த போதும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவில் வேற்று நாட்டினரும், வேற்று மதத்தினரும் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்திய தூதர் பிரதீபா பாக்கர், உலக சமாதான நிறுவன பிரதிநிதி பாக் கோரியா, துணை பிரதிநிதி அயன்ஓட், மியான்மர் நாட்டு புத்த மத துறவி சூசலசுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
லண்டன் நகரில் ஹாரோ தமிழ் சமூக சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா : தமிழர்கள் உற்சாகம்
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற வரலட்சுமி விரதம்: விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்ட பெண் பக்தர்கள்
பெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸுக்கு ஜெர்மனியில் சிறப்பான வரவேற்பு
லண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்
சுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா
லண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி