மூன்றடுக்கு முகக்கவசம்
2021-09-07@ 17:06:51

துணியால் செய்யப்பட்ட முகக்கவசம், சாதாரண ஒற்றை அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க், மூன்றடுக்கு முகக்கவசம், N95 முகக்கவசம் என பல வகைகளில் முகக்கவசங்கள் விற்பனைக்கு உள்ளன. துணியினாலான முகக்கவசம் கொரோனா பரவுதலை பொறுத்தமட்டில் எந்த நற்பயனையும் தருவதில்லை. அதேபோல் சர்ஜிக்கல் மாஸ்க் எனும் ஒற்றை அடுக்கு முகக்கவசமும் முழுமையான பாதுகாப்பை தருவதில்லை.
மூன்றடுக்கு முகக்கவசமே முழுமையான பாதுகாப்பை தரும். பொதுமக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிவதே போதுமானது. முழுப்பாதுகாப்பு அளிக்கும் மூன்றடுக்கு முகக்கவசம் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதன்பின் அதனை சரியான முறையில் பாதுகாப்பாக உயிர்கழிவு மேலாண்மை திட்டத்தின் அறிவுறுத்தலின்படி கழிவு நீக்கம் செய்ய வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்திய மூன்றடுக்கு முகக்கவசத்தினை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது கூடாது.இவ்வாறு செய்யும்போது நோய் தொற்று மற்றும் பரவல் ஏற்படும் வாய்ப்புள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றைய நோயாளர்களிடையே நேரடி தொடர்பில் இருப்பவர்கள் N95 வகை முகக்கவசங்கள் அணியலாம். பொதுமக்கள் அணிய வேண்டியதில்லை.
Tags:
மூன்றடுக்கு முகக்கவசம்மேலும் செய்திகள்
புதிய தொழில்நுட்பங்களால் முதியோரை பாதுகாக்கலாம்
ஆரோக்கியமாக இருக்க...
கல்லீரல் காக்கும் உடற்பயிற்சி
முதுமையை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
நாட்டு ஆப்பிள் பேரிக்காய்
காய்கறி தோல்களின் பயன்கள்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!