நீரிழிவைக் கட்டுப்படுத்த வைட்டமின் டி
2019-02-21@ 14:19:08

நன்றி குங்குமம் டாக்டர்
வைட்டமின் டி எலும்பு நலனுக்கு உகந்தது, சூரிய ஒளியில் கிடைப்பது என்று நமக்குத் தெரியும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட North american menopause society ஆராய்ச்சியில், நீரிழிவிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் வைட்டமின் டி உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
மனித உடலில் வயிற்றுக்கு பின் பக்கம் இருக்கும் கணையம் எனும் பகுதியிலிருந்து முறையாக இன்சுலின் சுரக்காமல் தடைபடும்போது குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளது. இதில் டைப் 1 என்பது கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படுவது. டைப் 2 என்பது கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படுவது. இதில் இந்தியாவில் அதிகமானோர் டைப் 2 வகை நீரிழிவு நோயால்தான் பாதிக்கப்படுகிறார்கள். இன்று புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக மக்களை அச்சுறுத்தி வருகிறது நீரிழிவு நோய். இதில் இந்தியர்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு எத்தனையோ வகையான மருந்துகள் இருந்தும், நோய் வந்த பிறகு கட்டுப்படுத்த முடியுமே தவிர அதனை முழுவதும் தடுப்பதற்கென இதுவரை எந்த மருந்தும் இல்லை என்கிறது ஆய்வு. தற்போது டைப் 2 வகை நீரிழிவு நோய் சம்பந்தமாக வட அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி மேற்கொண்ட ஆய்வில், தேவையான வைட்டமின் டி எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என தெரிய வந்துள்ளது. வைட்டமின் டி போதுமான அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம் கணையத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்த முடியும். அதனால் இன்சுலின் அதிகம் சுரக்க வாய்ப்பு உள்ளது. இன்சுலின் அதிகமாக சுரக்க தொடங்கிவிட்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் என்கிறது இந்த ஆய்வு!
கௌதம்
மேலும் செய்திகள்
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டேஷ் டயட்
இது அமர்க்களமான டயட்!
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ
நீரிழிவு நோயாளிகளின் நண்பன் பீன்ஸ்
கிராமங்களில் அதிகரிக்கும் நீரிழிவு
டயாபட்டீஸ் டயட்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!