SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை தேர் விபத்து!: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

760
27/04/2022

தஞ்சை களிமேடு பகுதியில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அமைச்சரும், எம்.எல்.ஏவும் ஆறுதல் கூறினர். இறந்தவர்களின் குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறியது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்