நல்லம்பள்ளி அருகே நாகாவதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட கோரிக்கை
12/3/2020 3:58:55 AM
தர்மபுரி, டிச.3: நல்லம்பள்ளி ஒன்றியம் நாகர்கூடல் ஊராட்சியில், ஆத்துக்கொட்டாய் கோம்பை கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள இந்த கிராம மக்கள், அரசு பள்ளி, ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, கழனிகாட்டூர் கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் நாகவதி அணையின் ஆற்றுக்கால்வாயில், மழைக்காலத்தில் வெள்ளபெருக்கு ஏற்படும் போது மாணவர்கள், கிராம மக்கள் 7 கிலோ மீட்டர் சுற்றி தான், கழனிகாட்டூர் கிராமத்திற்கு வரவேண்டியது உள்ளது. இல்லையென்றால், ஆற்றுக்கால்வாயில் இறங்கி வரவேண்டி உள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதல், இதுவரை 5பேர் ஆற்றுக்கால்வாயில் சிறுவர்கள், பெண்கள் 5பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்துள்ளனர். எனவே, ஆத்துக்கொட்டாய் கோம்பை- கழனிகாட்டூர் கிராமத்திற்கு ஆற்றின் குறுக்கே, மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தர்மபுரி திமுக எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணி பாலம் அமைத்து தருவதற்கான, சாத்திய கூறுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 62 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர்
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு
ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
பர்கூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்