ரயில் நிலையங்களில் மண்குவளையில் டீ, காபி: மத்திய அரசின் திட்டத்திற்கு நன்றி
12/3/2020 1:45:22 AM
சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்க தலைவர் சேம.நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை;நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக மண்குவளையில் டீ, காபி வழங்கப்படும் என்றும், அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்குவளை பயன்பாட்டை கொண்டு வருவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். இதன் மூலம் உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நல்ல முடிவை எடுத்து உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்த மத்திய அரசுக்கும், மத்திய ரயில்வே அமைச்சருக்கும் இந்தியாவில் மண்பாண்ட தொழில் செய்யும் 10 கோடி பேர் சார்பிலும், தமிழகத்தில் உள்ள 40 லட்சம் குலாலர் சமூக மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் இந்த முடிவை அனைவரும் வரவேற்பார்கள்.
மேலும் செய்திகள்
உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது: அரசு பதில்
சுங்கச்சாவடி - விம்கோ நகர் சாலை அமைக்கும் பணி துவக்கம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
லேப்டாப் கேட்டு மாணவர்கள் மறியல்
தாய் குறித்து தவறாக பேசியதால் ஆத்திரம் டீ மாஸ்டரின் கண்கள் தோண்டி எடுப்பு: போதை நண்பர் கைது: மெரினாவில் கொடூர சம்பவம்
மணலி எம்எப்எல் மத்திய அரசு நிறுவனத்தின் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: வெளிமாநிலத்தவரை அழைத்து வர எதிர்ப்பு
மீனவர்கள் சாலை மறியல்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்