கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
12/2/2020 4:25:46 AM
கொடைக்கானல், டிச. 2: கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கொடைக்கானலில் தாலுகா அலுவலகம் அருகே காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், இ-சேவை மையம், சமூக நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு வருபவர்கள், தாலுகா அலுவலகம் முன்பு தங்களது வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களும், அலுவலர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்தப்படும் வாகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது இப்பகுதியில் வாகனங்கள் வருவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தராசில் அரசு முத்திரை உள்ளதா? விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்
வேளாண்துறை அட்வைஸ் பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க மண்ணுக்கேற்ற உரம் அவசியம்
கோபால்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலையில் படுத்து போராட்டம்
இலவச சைக்கிள் வழங்கல்
பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!