நிலவேம்பு குடிநீர் விநியோகம்
12/2/2020 4:25:23 AM
பழநி, டிச. 2: பழநி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இதனால் பலருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழநி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சிறப்பு காவல்படை போலீசார், காந்தி மார்க்கெட் வியாபாரிகள், உழவர் சந்தை என பல இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், பழநி அருகே ஆயக்குடி கொய்யா சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அரசு சித்த மருத்துவமனையின் டாக்டர் மகேந்திரன் நிலவேம்பு குடிநீரை வழங்கினார். மேலும், காய்ச்சல் அறிகுறி, தடுக்கும் முறை, சிகிச்சை முறை, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 400க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் மலைப்பூண்டு கொள்முதல் மைய இடம் தேர்வு செய்ய உத்தரவு
கோயில் சிலைகளை அகற்ற எதிர்ப்பு வேடசந்தூர் அருகே பரபரப்பு
இங்க சாலை வர்றது எங்களுக்கே தெரியாதுங்க ஒரு ஆண்டுக்கும் மேலாக துவங்காத பணிக்கு ‘உடனடி பிளக்ஸ் போர்டு’ தேர்தல் அவசரமே காரணம் என பாளையம் பகுதி மக்கள் புகார்
வனஉரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் கொடைக்கானல் ஆதிவாசி மக்கள் கோரிக்கை
சின்னாளபட்டியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணி மக்கள் அவதி
திண்டுக்கல்லில் திறந்தவுடனே காந்தி மார்க்கெட்டுக்கு ‘கேட்’ வாக்கு ஆதாயத்திற்காக திறந்ததாக வியாபாரிகள் புகார்
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!