வீடு புகுந்து கொள்ளை வாலிபருக்கு 9 ஆண்டு சிறை
12/1/2020 5:12:17 AM
ஓசூர், டிச.1:ஓசூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் கனகட்டள சத்தியநாராயணமூர்த்தி(45). தனியார் நிறுவன மேலாளர். கடந்த 2012ம் ஆண்டு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, 9 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார். இது குறித்து அட்கோ போலீசில் கனகட்டள சத்தியநாராயணமூர்த்தி புகாரளித்தார். விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, சேலம் சூரமங்கலம் காவேரி நகரை சேர்ந்த சுதாகர்(41) என்பதும், அவர் ஓசூர் பஸ்தி விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி, சுதாகருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹15 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகள்
ஓசூர் அருகே 800 ஆண்டு பழமையான திம்மராயசுவாமி கோயில் தேரோட்ட திருவிழா
தளி அருகே மாடுகள் திருட்டு
பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்
ஊத்தங்கரையில் 2 இளம்பெண்கள் மாயம்
விடுதியில் தங்கி இருந்த தொழிலதிபர் சாவு
கொங்கன்செருவு கிராமத்தில் எருதாட்டம் கோலாகலம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்