கோவையில் நாட்டுக்கோழிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்
12/1/2020 3:00:25 AM
கோவை, நவ. 30: கோவை இக்கரை போளூவாம்பட்டி, தேவாரயபுரம், வெள்ளிமலைப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாநில கோழியின அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இதில், 450 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 6 ஆயிரத்து 750 மதிப்பிலான நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது, தேவராயபுரம், வெள்ளிமலைப்பட்டினம், இக்கரை போளூவாம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களுக்கு 450 பேருக்கு நாட்டுக்கோழி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழை பெண்கள் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்(பொ) ரூபன்சங்கர்ராஜா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள் சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
வெற்றிலை ஒருகட்டு ரூ.2ஆயிரத்துக்கு விற்பனை
தொடர் மழை, பனி மூட்டம் எதிரொலி பசுந்தேயிலை வரத்து சரிவு
ஓபிசி ஒதுக்கீட்டில் வருமான வரம்பை நீக்க வேண்டும்
விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்
மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா
ரூ.55லட்சம் நிதி ஒதுக்கியும் சமுதாய நலக்கூடம் அமைக்காததால் மக்கள் காத்திருப்பு போராட்டம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!