மணல் கடத்திய
12/1/2020 12:15:39 AM
பாபநாசம், டிச. 1: பாபநாசம் பகுதியில் மணல் கடத்தியதாக லோடு, வேன், மாண்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.பாபநாசம் கபிஸ்தலம் அடுத்த வாழ்க்கை பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனால் சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார்.இதேபோல் கபிஸ்தலம் அருகே தாவாரங்குடி பகுதியில் கபிஸ்தலம் பயிற்சி எஸ்ஐ வெற்றிவேல் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி மண்ணியாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கபிஸ்தலம் பயிற்சி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் வழக்குப்பதிந்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தார். பாபநாசம் அருகே மெலட்டூர் கொத்தங்குடியில் தாசில்தார் முருகவேல் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்து மெலட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முறையாக நடக்கிறதா?
துணை இயக்குநர் ஆய்வு ரூபாய் நோட்டுகளில் நேதாஜி உருவபடம் இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
குடியரசுதின அணிவகுப்பு ஒத்திகை திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா
தஞ்சையில் நாளை தம்பி விலாஸ் உணவகத்தை ஜி.கே.வாசன் எம்பி திறக்கிறார்
அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசின் பென்சன் வழங்க வலியுறுத்தல்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!