வீட்டை உடைத்து கொள்ளை
12/1/2020 12:05:54 AM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த மண்ணிவாக்கம், புதுநகரில் வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மண்ணிவாக்கம், புதுநகர் குறிஞ்சி பூ 2வது தெருவை சேர்ந்தவர் முத்து (69).
இவரது மனைவி தனலட்சுமி (63). கடந்த 25ம் தேதி முத்து, குன்றத்தூரில் உள்ள மகளின் வீட்டு கிரக பிரவேசத்துக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 சவரன் நகை, ₹10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்
வாக்குச்சாவடி அலுவலர்களுடன் ஆலோசனை
பறக்கும் படை சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியது
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன விபத்து தாய், மகள் உள்பட 3 பேர் பலி: 5 பேர் படுகாயம்
உறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை
பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!