சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்
12/1/2020 12:05:28 AM
சென்னை: சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக நிர்வாக வசதிக்காகவும்-கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், புதியதாக அமையப் பெற்ற சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக மயிலை த.வேலு அறிவிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து, சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்களாக செல்வி சௌந்தரராஜன், கே.எஸ்.மணி (எ) வெல்டிங் மணி, என்.அன்பழகன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், அ.வாசுதேவன், ச.வேலு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளருடன் இணைந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. துரைமுருகன் வெளியிட்டுள்ள மற்ெறாரு அறிவிப்பில், “ மயிலாப்பூர் கிழக்கு பகுதி பொறுப்பாளராக எஸ்.முரளி நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
போரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியை 15 நாளில் முடிக்க உத்தரவிட கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்