செல்போன் திருடியவர் கைது
11/30/2020 4:30:16 AM
ஈரோடு, நவ. 30: ஈரோடு அடுத்த லக்காபுரம் முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தனபால் (29). தொழிலாளி. தனபால் நேற்று முன்தினம் மாலை அவரது நண்பர் பார்த்திபன் என்பவருடன் ஈரோடு சவிதா பஸ் ஸ்டாப்பில் இருந்து லக்காபுரம் செல்வதற்காக டவுன் பஸ் ஏறினர்.தனபால் அருகில் நின்றிருந்த மர்மநபர், தனபாலின் மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். தொடர்ந்து தனபால், நண்பர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மடக்கி பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர், ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோட்டை சேர்ந்த குமார் என்ற ஜெகதீஷ் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீஷை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை
ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா
சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்
மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு
அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெருந்துறை தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்