ஆயுதப்படை வளாகத்தில் 140 போலீசாருக்கு மதுபோதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி
11/30/2020 4:22:38 AM
பெரம்பலூர், நவ.30:பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் 140 போலீசாருக்கு மது போதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல் பகுதியில் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு மதுபோதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகள் செயல்பாடு குறித்த நிகழ்ச்சிக்கு, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் ஔவை மகளிர் குழுக்க ளின் சங்கமம் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
பெரம்பலூர் புதியபாதை மது போதை மறுவாழ்வு மையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மதுபோதை மறுவாழ்வு மையத்தின் மூத்த ஆலோசகர் மணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள் சுகன்யா, கௌதம், தினேஷ், ஆகியோர் கலந்து கொண்டு மதுபோதையால் ஏற்படும் பாதிப்புகள் பின்விளைவுகள், குடும்பம் மற்றும் பணியின் போது ஏற்படும் இடையூறுகள் மதுபோதையால் பாதிக்கப்பட்டவருக்கு அளி க் கப்படும் சிகிச்சை முறைகள், குடும்பநலம் ஆலோச னைகள், தனிநபர் ஆலோசனைகள், மனநல மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பொது மருத்துவ ஆலோச னைகள்குறித்து விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீசார் அனைவருக்கும் மது போதை ஒழிப்பு மையத்தின் பணியாளர்கள் கௌதம், தினேஷ் ஆகியோர் புதியபாதை மது போ தை மறுவாழ்வு மையத்தின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர் முடிவில் நிறுவனத்தின் ஆ லோசகர் சுகன்யா நன்றி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
மழை நின்றும் வயலில் வடியாத தண்ணீர் மழையில் மூழ்கி பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை நிவாரணம் வழங்காவிடில் போராட்டம் நடத்த முடிவு
ஜெயங்கொண்டத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை
ஆர்டிஓ விசாரணை வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் 23ம் தேதி ஆர்ப்பாட்டம்
தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
குரும்பலூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
ஒலையூரில் வேளாண்துறை சார்பில் கழிவுப் பொருளை மக்க வைக்கும் காரணி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்