விட்டு விட்டு பெய்த மழையால் சீதோஷ்ண நிலை மாற்றம்: மக்கள் மகிழ்ச்சி
11/30/2020 4:17:19 AM
கரூர், நவ. 30: கரூரில் நேற்று மாவட்டம் முழுதும் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து கரூரின் சீதோஷ்ண நிலையை மாற்றியது. நிவர் புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாத நிலையில் கடந்த இரண்டு நாட்களூக்கு முன்பு இரவு 2மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதோடு, பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மாவட்டம் முழுதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து, கரூரை குளிர்வித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என கூறப்படுவதால் மேலும் கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
மேலும் செய்திகள்
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக கரூர், குளித்தலையில் தர்ணா போராட்டம்
தமிழ் ஆட்சிமொழி வார விழிப்புணர்வு பேரணி
வெள்ளியணை, வாங்கல் அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை
கரூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சி பக்தர்கள் தரிசனம்
உலக திறனாய்வர்களை கண்டறிய தடகள போட்டி
ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்